மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தக்காளி விலை எப்போது குறையும்?

தக்காளி விலை மீண்டும் உயர்ந்துவரும் நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

News image
Updated On :1 ஜூலை 2023, 4:41 am

DIN


தக்காளி விலை மீண்டும் உயர்ந்துவரும் நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. எனினும் கடந்த இரு நாள்களாக தக்காளி விலை ரூ. 50 - 80 வரை குறைந்தது.

தற்போது மீண்டும் இன்று (ஜூலை 1) தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்பனையாகிறது.

திடீர் மழை, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி இறக்குமதி குறைந்துள்ளது. கோயம்பேடு 1,100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால், கடந்த 4 நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது.

இந்நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், 

ஆண்டுமுழுவதும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. 

அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.