மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை காலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்தார். அவரை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். அதையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமார், சாய் ஜெ.சரவணன்குமார், சந்திரப்பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கேட்டறிந்ததாகவும், நிதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


