டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:02 pm

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க சென்றனர். அப்போது அருவிக்கு செல்லும் வழியில் உள்ள தேக்கங்காட்டில் 5க்கும் மேலான யானைகள் கூட்டமாக நின்றன. 

இதைபார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமடைந்து கைப்பேசி மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

தகவல் கிடைத்ததும் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சுற்றுலாப்  பயணிகளை வெளியேற்றினர். அருவிக்கு செல்லும் சாலையை அடைத்தனர். 

இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் யானைக்கூட்டம் வெண்ணியாறு செல்லும் வழியில் நின்றுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறுகையில், தேக்கங்காடு மற்றும் வெண்ணியாறு செல்லும் வழியில் 5க்கும் மேலான யானைகள் கூட்டமாக நடமாடி வருகிறது. வழக்கமாக வரும் யானைகள் தான். தற்போது மழைக்காலம் என்பதால் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும். விரைவில் யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்று விடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.