சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல: பழ.நெடுமாறன்

நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்குநல்லதல்ல என இந்திய தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார்.

News image
Updated On :11 ஜூலை 2023, 7:30 pm IST

நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு
நல்லதல்ல என இந்திய தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார்.

புதுவை மாநிலத்தில் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப்
பாடத்திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுவதை நிறுத்தக் கோரி
புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழர் தேசிய முன்னணி புதுவைக் கிளை சார்பில்
ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பழ.நெடுமாறன்
செய்தியாளர்களிடம் கூறியதாவது

நம் நாட்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மாநில மொழிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் கோட்பாடாக உள்ளது.

ஆனால், அதற்கு பிறகு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் அவை செயல்படுத்தப்படுகின்றன.

தற்போது சிபிஎஸ்இ, நீட் தேர்வு போன்ற பலவித செயல்பாடுகள் மூலம் மாநில
மக்களின் கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பல்வேறு மொழிகள் பேசியும், பல்வேறு கலாசார பின்னணியும் கொண்டுள்ள நம் நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பது நாட்டின்
ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.

ஆகவே, எவ்வளவு விரைவில் மத்திய அரசு மாநிலக் கல்வி உரிமையை பறிப்பதால் ஏற்படும் பாதிப்பை உணர்கிறதோ, அந்தளவுக்கு நல்லது. ஆங்கிலேயர் காலத்தில் கூட அந்தந்த மாநில மக்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணரவேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர்
துரைமால் இறைவன் தலைமை வகித்தார். அதன் தமிழ் மாநில தலைவர் முத்தமிழ்மணி, பொதுச்செயலர் நா.மு.தமிழ்மணி, பொருளாளர் மு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவையில் அவசர அவசரமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.