நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு
நல்லதல்ல என இந்திய தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார்.
புதுவை மாநிலத்தில் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப்
பாடத்திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுவதை நிறுத்தக் கோரி
புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழர் தேசிய முன்னணி புதுவைக் கிளை சார்பில்
ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பழ.நெடுமாறன்
செய்தியாளர்களிடம் கூறியதாவது
நம் நாட்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மாநில மொழிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் கோட்பாடாக உள்ளது.
ஆனால், அதற்கு பிறகு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் அவை செயல்படுத்தப்படுகின்றன.
தற்போது சிபிஎஸ்இ, நீட் தேர்வு போன்ற பலவித செயல்பாடுகள் மூலம் மாநில
மக்களின் கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பல்வேறு மொழிகள் பேசியும், பல்வேறு கலாசார பின்னணியும் கொண்டுள்ள நம் நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பது நாட்டின்
ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
ஆகவே, எவ்வளவு விரைவில் மத்திய அரசு மாநிலக் கல்வி உரிமையை பறிப்பதால் ஏற்படும் பாதிப்பை உணர்கிறதோ, அந்தளவுக்கு நல்லது. ஆங்கிலேயர் காலத்தில் கூட அந்தந்த மாநில மக்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணரவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர்
துரைமால் இறைவன் தலைமை வகித்தார். அதன் தமிழ் மாநில தலைவர் முத்தமிழ்மணி, பொதுச்செயலர் நா.மு.தமிழ்மணி, பொருளாளர் மு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவையில் அவசர அவசரமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பசுமை எரிசக்தி நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்

ஜனநாயக விரோதம்! திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



