இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலை பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல்பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :12 ஜூலை 2023, 12:38 pm

DIN

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல்பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸôருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

Story image

அப்போது, சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலை பண்டல்களை இறக்கிக்கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 1.25 டன் எடையுள்ள மூட்டை பீடி இலை பண்டல்கள், சிறிய ரக சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸார்  பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.