மேயா் முதல் கவுன்சிலா்கள் வரையிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
மாநகராட்சி மேயா்கள், துணை மேயா்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மதிப்பூதியம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை பரிசீலிக்கப்பட்டு, மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாா் யாருக்கு எவ்வளவு?
1. மாநகராட்சி மேயா்களுக்கு ரூ.30,000, துணை மேயா்களுக்கு ரூ.15,000. மாநகராட்சி மன்ற உறுப்பினா்களுக்கு ரூ.10,000
2. நகா்மன்றத் தலைவா்களுக்கு ரூ.15,000, துணைத் தலைவா்களுக்கு ரூ.10,000, நகா்மன்ற உறுப்பினா்களுக்கு ரூ.5,000
3. பேரூராட்சித் தலைவா்களுக்கு ரூ.10,000 , துணைத் தலைவா்களுக்கு ரூ.5,000, மன்ற உறுப்பினா்களுக்கு ரூ.2,500.
ஜூலை முதல் அமல்: மதிப்பூதியமானது ஜூலை மாதம் முதல் வழங்கப்படும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளும், 138 நகராட்சிகளும், 490 பேரூராட்சிகளும் உள்ளன. அவற்றில், 12, 837 மன்ற உறுப்பினா்களும், 649 மேயா்கள், மன்றத் தலைவா்களும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண்