எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகம் சென்றுள்ள தமிழக முதல்வரோ, காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்கான இடம் இது இல்லை என்கிறார். காவிரி நீரை தராமலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டியும், தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகளை பாதுகாக்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முதல்வர் பெற்று தரக்கோரியும், தமிழகம் முழுவதும் வரும் 23-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ஊராட்சிகளிலும், மாநகராட்சி, நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.