விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சப்தமில்லாமல் மீண்டும் உயர்ந்த ஆவின் பொருள்கள்!

ஆவின் பொருள்களின் விலை மீண்டும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2023, 9:32 am

DIN

ஆவின் பொருள்களின் விலை மீண்டும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சராசரியாக நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகிய பொருள்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

Story image

ஒரு கிலோ பன்னீர் ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆகவும், அரை கிலோ பன்னீர் ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

பன்னீர் 200 கிராம் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, பாதாம் மிக்ஸ் 200 கிராம் 100-ல் இருந்து ரூ.120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஆவின் பால் மற்றும் பாலில் செய்யப்பட்ட ஐஸ்கிரிம் போன்ற பொருள்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.