தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாள்களாகவே இரவிலிருந்து அவ்வபோது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது