தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

தேங்காய் விலை வீழ்ச்சி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம்!

தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது

திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் என்எஸ்பி வெற்றி.

Published On :

திருப்பூர்: தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூரில் உள்ள கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில செயல்தலைவர் என்எஸ்பி வெற்றி ஆகியோர் கூறியதாவது:

தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை, கரூர், சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க, கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விவசாயிகளிடம் இருந்து கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் தலைமைச் செயலகம் முன்பாக தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர். இந்த சந்திப்பின்போது, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.