திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் ஊழியர் பலி 

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் டோல்கேட் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
Updated On :30 ஜூலை 2023, 2:42 pm IST

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் டோல்கேட் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரளம் மாநிலம் நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தகொண்டிருந்தது. மதுரை கருப்பாயூரணி பிசி பெருங்காய சந்திப்பு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த லாரி திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இந்த நிலையில் லாரியை நிறுத்த முயன்றபோது லாரி வண்டியூர் டோல்கேட் உள்ளே புகுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த மதுரை வண்டியூர் எல்.கே.டி நகர் பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்ற 25 வயது ஊழியர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனைத் தொடர்ந்து லாரி அடுத்தடுத்து எதிரே வந்த கார் மற்றும் பைக்குகள் மீது மோதியதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரிசி ஏற்றி வந்த கனரக லாரி திடீரென டோல்கேட்டில் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.