நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏரியூரில் அடிப்படை வசதிகள் கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியல்!

ஏரியூர் அருகே சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 30க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜூன் 2023, 8:39 am

பென்னாகரம்: ஏரியூர் அருகே சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 30க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சிகலரஹள்ளி காங்கேயன் கொட்டாய் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்  முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனர். 

கோடை மழையினால் மண் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால், ஆபத்தான விவசாய கிணற்றிலிருந்து அன்றாட தேவைக்கான தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். 

காங்கேயன் கொட்டாய் பகுதியில் சாலை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை  எடுக்காததை கண்டித்தும், மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி 30க்கும் மேற்பட்ட லம்பாடி இன மலைவாழ் மக்கள் ஏரியூர் - சிகலரஹள்ளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டாததால் மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.