தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுவாணி அணையின் நீா்மட்டம் சரிவு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2023, 8:16 am


கோவை:  சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 

நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மார்ச்சில் அணையின் நீர் மட்டம் 6 அடியாகச் சரிந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் சரிந்தது. 

தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையிலும் அணையின் நீா்மட்டமானது, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீா்மட்டம் 2.85 அடியாகக் குறைந்தது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. 

வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பருவமழை தொடங்கிவிட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.