சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஜூன் 2023, 9:30 am

DIN

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, போக்குவரத்துத் துறை கூடுதல் செயலராக இருக்கும் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை செயலராக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முகசுந்திரம், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு மற்று ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னா, புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குநராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சிம்ரன்ஜீத் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர், மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.