தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சீர்காழி அருகே தர்கா கந்தூரி விழா: லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் பங்கேற்பு

சீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளி நாட்டினர் உள்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.  

News image

தர்கா கந்தூரி விழாவில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Updated On :7 ஜூன் 2023, 9:04 am IST


சீர்காழி: சீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் உள்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.  

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் ஆன்மீக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மீகத்தை பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்க்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். 

ஆண்டு தோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த நாளான கந்தூரி விழா நடைபெறவது வழக்கம். அதன்படி இன்று இரவு நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மௌலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மௌலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும்  வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உள்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.