ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரகுடி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Updated On :7 ஜூன் 2023, 6:38 am

DIN

ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் 
கடந்த 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு புதன்கிழமை  2-ஆம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது. 

தொடர்ந்து பூர்ணாகஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்கக் கோயில் வளம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.