மதுரையில் தினமணி நாளிதழ் சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

தினமணி சார்பில் நடத்தப்பட்ட தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.


மதுரை: தினமணி சார்பில் நடத்தப்பட்ட தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கோடை வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு  குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் வழங்கும் வகையில், 'தாகம் தணிப்போம்' நிகழ்ச்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் கடந்த 2018 முதல் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்குமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரைக் கிளை அலுவலக  மேலாளர் சி. சோமசுந்தரம், விளம்பரப் பிரிவு மேலாளர் சி.மீனாட்சிசுந்தரம், விற்பனைப் பிரிவு மேலாளர் பி.நாகமுத்துப்பாண்டியன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com