கருணாநிதி நூற்றாண்டு: தூத்துக்குடியில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,200 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கருணாநிதி நூற்றாண்டு: தூத்துக்குடியில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

தூத்துக்குடி: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,200 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் 1200 மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். 

இந்நிகழ்வில் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com