அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விழுப்புரம் அருகே பழிக்குப்பழியாக இரு ரௌடிகள் வெட்டிக் கொலை!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரௌடிகள் இருவர் சனிக்கிழமை காலை மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

News image
அருண், அன்பரசன்.
Updated On :10 ஜூன் 2023, 11:27 am

DIN


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரௌடிகள் இருவர் சனிக்கிழமை காலை மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம், பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் (32). இதுபோல புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பரசன்(28). ரெளடிகளான இருவரும் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை பைக்கில் வானூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக இருவரும் பிள்ளையார்குப்பத்திலிருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

லிங்கரெட்டிப்பாளையம் வழியாக தமிழகப் பகுதியான செங்கமேடு பகுதியில் இருவரும் சென்றுகொண்டிருந்த போது, 3 பைக்குகளில் வந்த 7 பேர் இருவரையும் வழிமறித்து அவர்களது பைக்குகள் மீது தங்களது பைக்குகளை மோதவிட்டனர். இதில் நிலைத்தடுமாறி சாலையோரத்தில் விழுந்த அன்பரசனை அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண் அங்கிருந்து தப்பியோடினர். சுமார் 2 கி.மீ. தொலைவு ஓடிய அருணை அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வானூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார், சடலங்களைக் கைப்பற்றினர் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் அருண், அன்பரசன் தொடர்புடையவர்கள் என்பதும், அந்த கொலையில் பழிக்குப்பழிவாங்கவே தற்போது கொலை நிகழ்ந்துள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.