காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் முன்பு கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு நிலவுகிறது.
ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் இன்று பிற்பகலில் சூட்கேஸ் ஒன்றை வீசிச் சென்றனர்.
அந்த சூட்கேஸை மெட்டல் டிடெக்டர் வைத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆய்வு செய்தபோது, அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சூட்கேஸை சோதனையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.