பவானி காலிங்கராயன் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு! 

பவானி காலிங்கராயன் அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்.
பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்.
Published on
Updated on
1 min read

பவானி: பவானி காலிங்கராயன் அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்காலின் பழைய பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்திற்காக ஜுன் 16 முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் 120 நாள்களுக்கு 5,154 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, காலிங்காயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலில் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. 

காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேறும் தண்ணீர்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவிப் பொறியாளர்கள் தினகரன், செந்தில்குமார், பவித்ரன், சபரிநாதன் மற்றும் காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். 

இதன்மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல்கட்டமாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து 500 கன அடி வரையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com