சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 327 கழிவுநீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது.
மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 மற்றும் 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழையால் முறிந்த மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வாராக்கடனை மீட்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி!

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!
வீடியோக்கள்

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

