கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து போராட்டம்

திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

News image
Updated On :19 ஜூன் 2023, 7:00 am

DIN

திருப்பூர்: திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டில் ஜம்ஜம் நகர், பழகுடோன்,வெங்கடேஸ்வரா நகர்,கோம்பை தோட்டம் ஆகிய பகுதிகளில 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  வார்டில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பு  சார்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடியேற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டு மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து மக்கள் நலன் நாடு, மாற்று இடம் தேடு என வலியுறுத்தி வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி மேயர் மாமன்ற கூட்டத்தில் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளன இது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால். மாநகராட்சி நிர்வாகத்தினர் 45 ஆவது வார்டுகளில் மாநகராட்சி சார்பில் எந்த விதமான அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாது என மிரட்டல் விடுக்கின்றனர். இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றவில்லை எனில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.