கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

News image
Updated On :19 ஜூன் 2023, 5:53 am

DIN


காஞ்சிபுரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் முடிவுற்ற நிலையிலும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜூன் 18 ஆம் தேதி முதல் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி, நேற்று காலை முதலே லேசான மேகமூட்டம் காணப்பட்டு லேசாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை பெந்தது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயில் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும், ரயில் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வேலை நாளான திங்கட்கிழமை பல்வேறு பணிகளுக்கு அதிகாலை நேரத்தில் வெளியூர் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

இருப்பினும் சூட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று குன்றத்தூரில் 8.8 செ.மீட்டர், காஞ்சிபுரத்தில் 8.7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று திங்கள்கிழமை(ஜூன் 19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.