வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜராகவில்லை!

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2023, 6:26 am

DIN


சென்னை: தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று நேரில் ஆஜராகாத அசோக், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.