அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜராகவில்லை!
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையும் படிக்க | சென்னையில் இயல்பை விட 295% அதிகம் பெய்த மழை
இந்நிலையில், இன்று நேரில் ஆஜராகாத அசோக், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...