பிளஸ் 1 தோ்வு: மறுகூட்டல் முடிவுகள்இன்று வெளியீடு

பிளஸ் 1 பொதுத் தோ்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த தோ்வா்களுக்கான முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படவுள்ளது.
Updated on
1 min read

பிளஸ் 1 பொதுத் தோ்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த தோ்வா்களுக்கான முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com