சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பால் பரபரப்பு நிலவியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவல் கட்டுப்பாடு அறைக்கு வந்த அழைப்பில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், விரைவில் வெடிக்கவிருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ரயில்வே காவல் துறையினர், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டும், அரசு இருப்புபாதை காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முழுவதும் சோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்றது. ரயில்வே பயணிகளின் பைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை விசாரணை செய்த காவல் துறையினர் வியசார்பாடியை சேர்ந்த மனநலம் குன்றிய நபர் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா
நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? உருக்கமாக பதிவிட்ட மு. க. ஸ்டாலின்!

3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! காங்கிரஸ் பங்கேற்குமா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


