அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பாலாலயம்! 

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி புதன்கிழமை பாலாலயம்  நடைபெற்றது. 

News image
Updated On :28 ஜூன் 2023, 3:16 am

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி புதன்கிழமை பாலாலயம்  நடைபெற்றது. 

Story image

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் திருக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில். பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க இத் திருக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியது.

Story image

இதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. 

Story image

திருக்கோயில் ஸ்தல ஸ்தானீகர்களால் ஏழு யாக சாலைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்யப்பட்டு இரண்டு காலை பூஜைகளும் நடைபெற்றன. 

Story image

இதையும் படிக்க | 

முதற்கட்டமாக ராஜகோபுரம் பல்லவ கோபுரம் பகுதியில் உள்ள விகட சக்கர விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், ராஜ கோபுர விநாயகர், ராஜ கோபுர ஆறுமுகர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது. 

Story image


யாகசாலை முடிந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து வந்து திருக்கோயில் மூலவர் கருவறை முன்பு அமைந்துள்ள தெய்வங்களுக்கு பாலாலய அபிஷேகம் செய்தனர். 

Story image

இந்நிகழ்வில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் ரா. வான்மதி திருக்கோவில் செயல் அலுவலர்கள் ந. தியாகராஜன், அமுதா, வேலனரசு, செந்தில்குமார், ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வேல்மோகன் தலைமையிலும் கோயில் செயல் அலுவலர் பா. முத்துலட்சுமி முன்னிலையிலும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோயில் ஸ்தானீகர்கள், கோயில் சிவாச்சாரியார்கள் ஆகியோர் செய்திருந்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.