தூத்துக்குடி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அன்பு, சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.