கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அணைகளின் நீர் திறப்பு காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 992 கன அடியிலிருந்து வினாடிக்கு 1223 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.54 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.57 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com