
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிளஸ் 1, பிளஸ் 2: பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு இன்று தொடக்கம்
கர்நாடக அணைகளின் நீர் திறப்பு காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 992 கன அடியிலிருந்து வினாடிக்கு 1223 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.54 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.57 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.