மும்பையில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பவர்களை களையெடுக்கும் பணியை ரயில்வே தீவிரப்படுத்தியிருக்கிறது.
ரயில்கள், ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான டிக்கெட் பரிசோதகர்கள், தொடர்ந்து பணியாற்றி, டிக்கெட் எடுக்காமல், ரயிலில் பயணித்த சுமார் 18 லட்சம் பயணிகளைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து ரூ.100.3 கோடியை அபராதமாக வசூலித்துள்ளனர்.