ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி, அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி, அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கில்  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து பல சுற்றுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.6 சதவிகித வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 25.8 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார். 

தேர்தலில் போட்டியிட்ட மற்றக் கட்சிகள் 8.32 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. 798 வாக்குகள் நோட்டாவிற்கு சென்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com