மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு

சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், 300 காளைகள், 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜங்களாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On :

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், 300 காளைகள், 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி போட்டி நடைபெறும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் ஆகியோர் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.   தொடர்ந்து போட்டி நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 300 காளைகளும், 500க்கு மேற்பட்ட வீரர்களும் பங்கேற்று உள்ளனர். 

Story image

போட்டி தொடங்கிய நிலையில் வாடிவாசல் வழியில்  படுத்துக் கொண்ட காளை

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று மடக்கி பிடித்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனுக்குடன் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டி தொடங்கிய நிலையில் வாடிவாசல் வழியில் காளை ஒன்று படுத்துக் கொண்டதால் போட்டி தொடங்குவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. 

Story image

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மடக்கி பிடித்த வீரர்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, துணை கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள்,  ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.