நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை தேவை என மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தனியாா் நிதி நிறுவனகளின் மோசடிகள் தொடா் கதையாகி வருகிறது. இந்த நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் மக்கள் விழிபிதுங்கி நிற்பதுடன் சிலா்
தற்கொலை செய்து கொள்கின்றனா். தமிழகத்தின் வட மாவட்டங்களை மையமாக வைத்து இயங்கி வந்த ஆரூத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், விஆா்எஸ் போன்ற நிதி நிறுவனங்கள் சுமாா் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை மக்களிடம் கொள்ளையடித்து விட்டு நிறுவனங்களையும் மூடிவிட்டுச் சென்று விட்டனா்.
இந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளா்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனா். போலி நிதி நிறுவனங்களின் மீது உறுதியான சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், மோசடி நிறுவனங்களுக்கு உதவி செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டு. மேலும், அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். பணத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.