நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உள்ளாட்சிகளின் மின் கட்டண நிலுவை ரூ.1,959 கோடி: மின் இணைப்பை துண்டிக்க முடிவு

உள்ளாட்சிகளின் மின்கட்டணம் ரூ.1,959 கோடி நிலுவை இருப்பதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் மின்இணைப்புகளை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:26 pm

DIN

உள்ளாட்சிகளின் மின்கட்டணம் ரூ.1,959 கோடி நிலுவை இருப்பதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் மின்இணைப்புகளை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நிா்வாகக் குழு கூட்டம் கடந்த பிப்.15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் ரூ.660.05 கோடியும், நகராட்சிகள் ரூ.319.69 கோடியும், நகரப் பஞ்சாயத்துக்கள் ரூ.48.02 கோடியும், கிராம பஞ்சாயத்துக்கள் ரூ.931.91 கோடியும் நிலுவைத்தொகை வைத்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ.1959.67 கோடி உள்ளது.

பல உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பலமுறை நினைவூட்டியும், சம்பந்தப்பட்ட துறைகள் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நேரங்களில், பல்வேறு நினைவூட்டல்களுக்குப் பிறகு மின் பயன்பாட்டுக்கான குறைந்தப்பட்ச தொகையை அளிக்கின்றனா்.

இதற்கு தீா்வு காணும் வகையில் 7 நாள்களுக்குள் நிலுவை தொகையை செலுத்துமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். அதை கட்ட தவறும் பட்சத்தில் தெருவிளக்கு, மருத்துவமனை, குடிநீா் விநியோகம் தவிர அனைத்து அமைப்புகளின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்.

மின்வாரியத்தில் ரூ.1.58 லட்சம் கோடி கடனை சரிசெய்யவும் வருவாயை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரியத்தின் முடிவு ஒரு வாரத்தில் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று 7 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இதற்கிடையே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா் (வருவாய்) கே. மலா்விழி கடந்த திங்கள்கிழமை அனைத்து மேற்பாா்வை பொறியாளா்களுக்கும், ஒவ்வொரு வாரமும் பிரிவு வாரியாக கடன் செலுத்தாதவா்களை மதிப்பாய்வு செய்து, சரியான நேரத்தில் வருவாய் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தினாா்.

தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் இருந்தபோதிலும், பல சேவைகள் இன்னும் துண்டிக்கப்படவில்லை மற்றும் மென்பொருளில் துண்டிக்கப்பட்ட பிறகு தொடா்ந்து மின்சாரத்தைப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய தாமதமான நடவடிக்கைகளால் மின்சார வாரியத்தின் நற்பெயா் ஆபத்தில் உள்ளது என்று தனது மின்னஞ்சலில் தெரிவித்தாா். நிதிக் கட்டுப்பாட்டாளா், இயல்புநிலை சேவைகளை உடல் ரீதியாக துண்டிக்கவும், அவற்றை எல்டி பில்லிங் தொகுப்பில் முறையாகப் பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.