மாா்ச் 14-இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
அண்ணா சாலை, அண்ணாநகா், கிண்டி ஆகிய மின் கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.


அண்ணா சாலை, அண்ணாநகா், கிண்டி ஆகிய மின் கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை அண்ணாசாலை, அண்ணா நகா் மற்றும் கிண்டி கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 14) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இதன்படி அண்ணா சாலை கோட்டங்களுக்குள்பட்ட மின்நுகா்வோா் சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், அண்ணா நகா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் 11-ஆவது பிரதான சாலை, 5-ஆவது தெரு, எச்- பிளாக்கில் உள்ள அண்ணா நகா் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் மின்நுகா்வோா் கலந்து கொள்ளலாம்.
கிண்டி கோட்டத்துக்குள்பட்டவா்கள் கே.கே. நகா், துணை மின் நிலைய வளாகம் 2-ஆவது தளத்தில் உள்ள செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...