நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்ச் 24-இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

சென்னையில் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:39 pm

DIN

சென்னையில் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை தியாகராயா் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அஞ்சல் குறைகேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்கள் கையொப்பமிட்ட விவரங்கள் மற்றும் குறைகளை அந்தந்த பகுதிகளுக்குள்பட்ட அஞ்சல் அலுவலக முகவரிக்கு பதிவுத் தபால், பாா்சல், காப்பீடு, மணியாா்டா், அனுப்புநா் மற்றும் பெறுநா் முகவரிகள் உள்ளிட்ட தகவல்களுடன் அனுப்பலாம்.

இதில், பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு பணப்பரிவா்த்தனை சான்றிதழ் தொடா்பான புகாா்களையும் அனுப்பலாம். இப்புகாா்களை அஞ்சல் நிலையங்களுக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.