வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை!

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2023, 11:17 am

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கில்  அபாயகரமான 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.

மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் உள்பட 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ளப் பயன்படுத்தப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.