கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்'

பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 மார்ச் 2023, 4:13 pm

பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கு 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

தேர்வு என்பது மாணவர்களை பரிசோதிக்க அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதற்கும் உயர்த்தி விடுவதற்கும் தான். பொதுத்தேர்வில் எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் வரப்போகிறது. எனவே பொதுத் தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவரும் எந்தவித தயக்கமும், பயமும் இன்றி நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள். 
பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.