ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூா் தோ், 20 பட்டைகளாக காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தோ் 96 அடி (கொடியுடன் சோ்த்தால் 99 அடி) உயரமும், தோ் 350 டன் எடை கொண்டதாகும்.
அலங்கரிக்கப்படாத தேரில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 18 அடி உயர கால்களாக, பனைசப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னா் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கு, நெடுக்கு வாக்கிலும், தேரிலிருந்து 20 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்பட்டு விட்டன.
பொதுவாக ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் முடிவடைய 1 மாத காலம் ஆகும். ஏப்.1-ஆம் தேதி ஆழித்தேரோட்டத்துக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தோ்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: கோவையில் வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்
இந்த நிலையில், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.