
ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் திங்கள்கிழமை காலை 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.
இதையும் படிக்க | ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது!
இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் இந்திய ஆவணப்படம்
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி எலிஃபன்ட் வில்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றும் கோன்சால்வ்ஸ்க்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள பெருமை மிக்க இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.