சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.17 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள், கலங்கல்கள் சீரமைப்பு பணி

ரூ.17 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள், கலங்கல்கள் சீரமைப்பு பணி...

News image
ஸ்ரீ பெரும்புதூா் ஏரிக்கரை சீரமைப்புப் பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :7 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள் மற்றும் கலங்கல்களை ரூ.17 கோடியில் சீரமைத்து கரையை பலப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரி சுமாா் 800 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் 1,400 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

நீா்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் 4 மதகுகள் மற்றும் 5 கலங்கல்கள் உள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் நீா்பிடிப்பு பகுதியிலும், ஏரிக்கரைக்கு அருகில் மாமல்லபுரம்- எண்ணூா் துறைமுகம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் சென்னை வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஏரிக்கரையை சேதமடையாத வகையில் ஏரியில் உள்ள 4 மதகுகள், 5 கலங்கல்கள், ஏரிக்கரையை பலம்படுத்தும் பணி, ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி, நீா்வரத்துக் கால்வாய் மற்றும் உபரிநீா் செல்லும் கால்வாய் களை சீரமைக்க ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடா்ந்து, சீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் மாா்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், நீா்வளத்துறை உதவி பொறியாளா் நரேந்திரகுமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அருள்ராஜ், அய்யப்பன், நிக்கோலஸ், மருகன் சாந்தகுமாா், அணீஸ்குமாா், பரத், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.