
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி சென்னை வருகை
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்வில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதன்படி, 6 மகளிர் குழுக்களுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 4.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 316 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் அர. சக்கரபாணி, வீ. மெய்யநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.