இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் மாநிலம் முழுவதும் புகாா் வரும் பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானம் கழகம், வணிக வரித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,சாா் பதிவாளா் அலுவலகம், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நகா் ஊரமைப்பு இயக்கம் என 60 அரசு அலுவலகங்களில் புதன்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனர்.