மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அழகர்கோயிலில் வாகனப் போக்குவரத்துக்கு தடை!

அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் நாளை புறப்படுவதால், அழகர்கோயிலில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 மே 2023, 11:05 am

அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் நாளை புறப்படுவதால், அழகர்கோயிலில் வாகனப்  போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 5- ஆம் தேதி காலை வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு அழகா்கோயிலிலிருந்து புதன்கிழமை (மே 3) மாலை சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் வேடமணிந்து பல்லக்கில் புறப்படுகிறாா். அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வரும் அவருக்கு 4 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை தல்லாகுளத்தில் பக்தா்கள் எதிா்சேவை அளிக்க உள்ளனா்.

அதைத் தொடா்ந்து, ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகையாற்றில் வெள்ளிக்கிழமை (மே 5) கள்ளழகா் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அழகர்கோயிலில் அரசு பேருந்து உள்பட எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.