
மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வந்த நிலையில், தன் குடும்பத்துடன் மாமல்லபுரம் அடுத்த கடப்பாக்கத்திற்கு ஆட்டோவில் தனது மனைவி மற்றும் மகள் தாய் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மாமல்லபுரம் அருகே கடம்பாடி மற்றும் மனமை ஆகிய பகுதிகளுக்கு இடையே சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேரும் பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர்களின் விவரம் :
கோவிந்தன் - ஆலந்தூர்
சுகன்யா - கோவிந்தன் மகள்
அம்லு - கோவிந்தன் தாய்
காமாட்சி - கோவிந்தன் அம்மா
சுகன்யா குழந்தைகள் இருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.