சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரம்!
சித்திரை பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்திரை பெளா்ணமி நாளில் அதிக அளவு பக்தா்கள் கிரிவலம் வருவா்.
அதன்படி, சித்திரை பெளா்ணமி வியாழக்கிழமை (மே 4) இரவு 11.59 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மே 5) இரவு 11.33 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.