பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து!

ராணிப்பேட்டை அருகே சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை  தடுப்பு மீது  மோதி விபத்துக்குள்ளானது.

News image
Updated On :7 மே 2023, 3:44 am

DIN

ராணிப்பேட்டை அருகே சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை  தடுப்பு மீது  மோதி விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே உள்ள ஆட்டோ நகர் பகுதியில், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு பெங்களூர் குண்டூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவரை இடித்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திருவலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் விக்டர் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நெடுஞ்சாலை காவல் துறையினர்  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

மேலும் விபத்து காரணமாக சென்னை சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஊர்ந்து  சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.