காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய தொடங்கியது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 5 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6712 கன அடியாக அதிகரித்தது.
தற்போது, காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 6595 கன அடியாகவும், நேற்று காலை வினாடிக்கு 6295 கன அடியாகவும் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை வினாடிக்கு 4906 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.54 அடியிலிருந்து 102.74 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.43 டி.எம்.சி. ஆக உள்ளது.