தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

விரைவில் சசிகலாவை சந்திப்பேன்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 மே 2023, 7:31 am

கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலில் திடீா் திருப்பமாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனா்.

சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய அவா்கள், அதிமுகவை மீட்டு தொண்டா்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூட்டாகத் தெரிவித்தனா்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு ஓ.பன்னீா்செல்வம், மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் வந்தனா். டி.டி.வி.தினகரனைச் சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் பேசினாா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்  கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த நலனுக்காக ஓ.பன்னீர் செல்வம் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் எனக் கூறிய உதயகுமார் கேள்விக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.